ரயில் லொறியுடன் மோதி விபத்து!

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த Intercity AC ரயில், ரயில் கடவையை கடந்த லொறி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (23) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் லொறி சாரதியும் மற்றுமொருவரும் படு காயமடைந்துள்ளனர்.

மேலும், நேற்றையதினம் இந்த ரயில் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த போது மீசாலையில் ரயில் கடவையை கடந்த முதியவர் ஒருவர் மீது மோதியதில் முதியவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply