கொலம்பியா பயணிகள் பேருந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்கு  50 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து,  நிலைதடுமாறி வீதியோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில், பேருந்தில் பயணித்த 10 பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாகவும்,  30 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply