வெளிநாட்டு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 37 தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

தங்காலை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஒகவெல இஹல பெலிகல்ல பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கியுடன் 3 மகசீன்கள் மற்றும் ஒன்பது மில்லிமீற்றர் அளவான 37 தோட்டாக்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், குற்றச் செயல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக ஒகவெல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply