தவறான முடிவெடுத்து இளைஞன் சாவு – அச்சுவேலியில் சம்பவம்

காதலில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அச்சுவேலி மேற்கு தோப்பு பகுதியைச் சேர்ந்த விமலேஸ்வரன் அசாத் நேருஜன் என்னும் 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை பருவத்தில் ஏற்பட்ட காதல் தீடீரென ஐந்து வருடங்கள் கடந்து முடிவடைந்த நிலையில், காதலில் தோல்வி அடைந்த இளைஞன் சில நாட்களாக மனவிரக்தியில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று இரவு காணாமல் போயுள்ள நிலையில், வீட்டுக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முடிவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply