கல்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய போதைப்பொருள்!

இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கல்பிட்டி தடாகத்தில் உள்ள மட்டுத்தீவுக்கு  அண்மித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 606 கிலோகிராம் ஈரமான எடையுடைய  பீடி இலைகள் நீரில் மூழ்கியிருந்ததை கண்டுபிடித்தனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் 19 சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த  பீடி இலைகள் கல்பிட்டி குளத்தில் உள்ள நீரில் மூழ்கியிருந்த நிலையில், அவை கடத்தல்காரர்களால் கரைக்கு கொண்டு வர முடியாமல் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் தற்போது கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என  இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply