சூடானில் ஏவுகணைத் தாக்குதல் – 16 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இராணுவத்தினருக்குமிடையே பல நாட்களாக மோதல் நிலைமை நிலவி வருகின்றது.

இந்தநிலையில் தலைநகர் கார்டூமிற்கு மேற்கே ஒம்துர்மன் நகரில் இராணுவ தளத்தின் முகாம் மீது, துணை இராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி திடீர்த் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த ஏவுகணையானது முகாமுக்கு அருகிலுள்ள  சந்தைப் பகுதியில் விழுந்துள்ளது.

தாக்குதலில் பொதுமக்கள் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதோடு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply