ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையில் முறைப்பாடு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட், ஒரு தனியார் நிறுவனம் என்பதால் அதன் பணத்தை எவ் வகையிலும் செலவிடலாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கருத்து தெரிவித்த நிலையில், இதற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

இதனை மகேன் ரடட அமைப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளது.

மேலும், மக்களின் பணத்தை மோசடி செய்யும் இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை உடனடியாக பதவி விலக வேண்டும் என அதன் தலைவர் சஞ்சய் மஹவத்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2022ம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கையில் வெளியிடப்பட்ட வரைவு, அதில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மற்றும் ஹிரு ஊடக வலையமைப்புக்கு விதிக்கப்பட்ட கிரிக்கெட் தணிக்கைகள் குறித்தும் நேற்றைய அரசியல் அரங்கில் முக்கிய பேசுபொருளாக மாறியிருந்தது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply