முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது

கோட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் டென்சில் பத்மசிறி, கோட்டையில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் பெற்றோர்கள் குழுவிற்கு தனது அந்தரங்க உறுப்புகளை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, முன்னாள் கவுன்சிலர் சமந்தா பெரிஸ் என்ற ஆர்வலர் ஒருவர் வாட்ஸ்அப் குழு மூலம் தகாத இடுகைகளைப் பகிர்ந்து அதிபரை துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டி, அதிபர் மற்றும் பெற்றோர் வெலிக்கடை காவல்துறையில் புகார் அளித்தனர் எனக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து புகாரை விசாரித்த பொலிஸார் விசாரணை நடத்தினர். இதன் போது, முன்னாள் கவுன்சிலர் சமந்தா பெரிஸ், டென்சில் பத்மசிறியுடன் காவல் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறும் போது வெலிக்கடை பொலிஸ் சிற்றுண்டிச்சாலைக்கு வெளியே டென்சில் பத்மசிறி தனது அந்தரங்க உறுப்பை வெளிப்படுத்தியதாகக் கூறி அதிபரும் பெற்றோரும் பொலிஸில் மற்றொரு முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து நேற்று சட்டத்தரணி ஊடாக வெலிக்கடை பொலிஸில் சரணடைந்ததையடுத்து குறித்த சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply