கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை, பிரதேசத்தில் வீடொன்றின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்றைய தினம் (26) காலை விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போதே வீட்டின் பின்புறம் சுமார் 2 அடி உயரத்தில் இருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிரம்பிய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply