குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த வைத்தியர்கள் – முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் குழந்தை பெற்ற தாய் ஒருவரின் வயிற்றில் துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்று பதிவாகியதையடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 21.05.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த,34 வயது தாய் ஒருவருக்கே இவ்வாறு வயிற்றில் துணியை வைத்து தைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்தினர் மீது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply