பிலிப்பைன்ஸில் படகு கவிழ்ந்து விபத்து – 26 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 26 பேர்  உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே அந்தப் படகு சென்று கொண்டிருந்த போது, பலத்த காற்று வீசியதால் அச்சமடைந்த பயணிகள் படகின் ஒரு பக்கத்திற்குச் சென்ற போது சமனிலையிளந்த படகு விபத்துக்குள்ளாகியுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த விபத்து கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

படகில் பயணித்தவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் தெரியவில்லை எனக் கூறியுள்ள அதிகாரிகள், படகில் பயணித்த 40 பேரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply