அஸ்வெசும தொடர்பில் பிரதமரின் உத்தரவு!

அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கும், கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற மஹரகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதமர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நாட்களில், அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தல் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் பணிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply