குவைத்தில் இருந்து 62 இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்!

செல்லுபடியாகும் விசாக்கள் இன்றி சட்டவிரோதமாக பணிபுரிந்த 62 இலங்கை பிரஜைகள் குவைத்தில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் தயாரிக்கப்பட்ட தற்காலிக கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இந்த குழுவினர் குவைத்தில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உள்நாட்டு சேவைகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீடுகளை விட்டு ஓடிப்போய், பல இடங்களில் பணிபுரியும் போது தற்காலிக விடுதிகளில் தங்கியிருந்ததாகவும், விசா இல்லாததால் இது சட்டவிரோதமானது என்றும் அவர் மேலும் கூறினார்.

அதன்படி, நாடு கடத்தப்பட்டவர்களில் 59 பேர் பெண் வீட்டுப் பணியாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூவர் ஆண் வீட்டுப் பணியாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply