போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டு வீச்சு!

பொரளையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

அதன்படி, பொரளை, சஹஸ்புரவுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்றுகாலை 10.00 மணி வரை கொழும்பின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துவதற்கு, முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதன்மூலம், முன்னிலை சோசலிச கட்சியின் செயற்பாட்டாளர் துமிந்த நாகமுவ மற்றும் 11 பேருக்கு தேசிய மருத்துவமனை சதுக்கம், தேசிய கண் மருத்துவமனை மற்றும் பல நிறுவனங்களுக்கு அருகாமையில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவு தடை விதித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply