பெண்கள் குளிப்பதை காணொளி எடுக்கும் கேவலமான செயற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி!

மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில் உள்ள கீரியோடை வாவியில் வளர்ப்பு மீன் திட்டம் என்கின்ற போர்வையில் வாவியை மறித்து மீன் வளர்க்கப்படுவதாகவும் வாவியினுள் சிசிடிவி கமராவினை வைத்து பெண்கள் குளிக்கும் போது காணொளி எடுப்பதாகவும் பிரதேச மக்கள் குற்றச்சுமத்தியுள்ளனர்.

குறித்த நன்னீர் மீன் திட்டத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னெடுத்து வருவதாகவும் அப்பிரதேசத்தில் அந்த வாவியை நம்பி வாழ்வாதாரத்திற்காக மீன்களைப் பிடித்து விற்பனை செய்பவர்கள் குறித்த நபர்களால் தாக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வாவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மீன்பிடித்த ஒருவர் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர்  வீடு திரும்பி உள்ள வேளையில் அவ்விடத்தில் யாரும் மீன் பிடிக்க கூடாது என்று பதாதை வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது .

அதுமட்டுமன்றி, மீன் வளர்ப்பில் ஈடுபடுகின்ற தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் ஆயுதங்கள் தாங்கியிருப்பதையும் அவதானிக்க முடிக்கின்றதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறாக இருந்தாலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் மிகவும் பாரதூரமான செயற்பாடுகளாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.

அதுமட்டுமின்றி சிசிடிவி கமரா மற்றும் ட்ரோன் கமரா போன்றவற்றை பாவித்து காணொளி எடுப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆற்றினை மறித்து கூடாரம் அமைத்து மீன் வளர்ப்பதாக கூறி பெண்கள் குளிக்கும் போது சிசிடிவி கமரா மூலம் அதை அவர்கள் பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

பெண்கள் அதிகமாக இருக்கின்ற இடத்தில் வாவியில் சிசிடிவி கமரா பொருத்தி கண்காணிக்கும் செயற்பாட்டை கேவலமான நடவடிக்கையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஈடுபடுகின்றது என சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply