தையிட்டி சர்ச்சைக்குரிய விகாரை விவகாரம் – மீண்டுமொரு போராட்டத்திற்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிராக மேற்கொள்ளவுள்ள மற்றுமொரு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு வலுசேர்க்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்  அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து ஊடக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

குறித்த போராட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும், தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே 03 ஆம் திகதி முதல் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாகவே சட்டவிரோதமான திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம், இன்று திங்கட்கிழமை பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்து நாளை செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணிவரை  இடம்பெறவுள்ளது.

இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு  நாடளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply