கொழும்பில் திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோருக்கு, வீதிகள் மற்றும் நடைபாதைகளை மறித்து பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துவதற்கு தடை விதித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை காலை 10 மணி வரையிலான காலப்பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், கொழும்பு 10, டெக்னிக்கல் சந்தியில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் வரையிலான பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு பேரணிகள் அல்லது ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வசந்த சமரசிங்க உள்ளிட்ட குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திட்டமிட்ட ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் மருதானை பொலிஸார் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply