வெற்றியுடன் ஆரம்பித்த ஜெவ்னா கிங்ஸ்; 4ஆவது எல்.பி.எல் தொடரின் முதலாவது ஆட்டநாயகன் வியாஸ்காந்த்!

4 ஆவது எல்.பி.எல் தொடர் நேற்று ஆரம்பமான நிலையில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் ஆணியை வீழ்த்தி ஜப்னா கிங்ஸ் அணி தொடரின் முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

அத்துடன், இப் போட்டியில் 2 விக்கெட்களைக் கைப்பற்றி யாழ் மண்ணின் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் 4 ஆவது எல்.பி.எல் தொடரின் முதலாவது ஆட்டநாயகன் விருதை தனதாக்கிக்கொண்டார்.

கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் டவ்ஹித் ஹ்ரிடோய் 39 பந்துகளில் 54 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

கொழும்பு அணி சார்பில் மதீஷ பத்திரன ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.

இதன் மூலம் கொழும்பு அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து துப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 152 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்த நிலையில் ஜப்னா கிங்ஸ் அணி 4ஆவது எல்.பி.எல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் பந்துவீச்சில் ஹார்டஸ் வில்ஜோன் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஜயகாந்த் வியாஸ்காந்த் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply