எமது நிலம் எமக்கு வேண்டும் – யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு – அக்கரைவெளியிலுள்ள 1500 ஏக்கர் காணி மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதை எதிர்த்தே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்தனர்

இதேவேளை, இவ்வாறான காணி சுவீகரிப்பிற்கு எதிராக தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெறும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply