ஜேர்மனி செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் நால்வர் விமான நிலையத்தில் கைது!

போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகள் மூலம் ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 5 இளைஞர்கள், நேற்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ் இளைஞர்களில் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடையவரும் மேலும் நான்கு இளைஞர்கள் யாழ். பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் ஆவார். இவர்கள் ஐவரும் ஜேர்மனிக்கு செல்ல முயற்சித்தபோதே கைது செய்யப்பட்டுள்னர்.

இந்த இளைஞர்களால் வழங்கப்பட்ட ஆவணங்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்டு , அவர்களிடம் காணப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் விமான டிக்கெட்டுகள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply