உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் இராணுவம் ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மீது தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் அமைந்துள்ள அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யாவின் எல்லைக்குள் போர் நுழைந்து விட்டது என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்த மறுநாளில் ரஷ்ய இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply