திருகோணமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு தீக்கிரை!

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியில் மீன்பிடி படகொன்று இனம் தெரியாத நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டு முழுமையாக சேதமடைந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

துறைமுகத்துவார கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த மீன்பிடி படகே இவ்வாறு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் மூலம் படகின் உரிமையாளர் பல லட்சம் ரூபாய் நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply