தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய தூதுவருக்கு இடையில் சந்திப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும்,  இந்திய தூதுவருக்கும் இடையில், சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இம்மாதம் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதுவரின் அழைப்பிற்கமைய இடம்பெறவுள்ள சந்திப்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply