கோவில் திருவிழாவில் களவாடப்பட்ட பெண்ணின் தாலிக்கொடி! 4பெண்கள் கைது!

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 4 பெண்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தேர்த்திருவிழாவில் தண்ணீர் பந்தலில் பானங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோதே பெண் ஒருவரின் தாலிக்கொடி குறித்த நபர்களால் களவாடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய சிலாபத்தைச் சேர்ந்த 26 வயதான பெண், வவுனியாவைச் சேர்ந்த 37 வயதான பெண், மாத்தறையைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் மற்றும் 49 வயதான இந்தியப் பிரஜை ஒருவர், மக்களால் பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply