மகா விகாரை பிக்குவை தாக்கிய 8 பேர் கைது

பொத்துவில் முஹுது மகா விகாரையில் வசித்து வந்த பிக்கு ஒருவரை தாக்கி 57,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை அபகரித்துச் சென்ற 8 நபர்களை பொத்துவில் பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களும் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் எனவும் அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் 34, 40, 39, 34, 38, 43 மற்றும் 56 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply