மயிலத்தமடு பகுதியிலும் முளைத்த திடீர் புத்தர் – அதிர்ச்சியில் பண்ணையாளர்கள்i

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணையில் காணப்பட்ட விகாரை 2019 ஆம் ஆண்டு மகாவலி திட்டத்தால் அகற்றப்பட்டிருந்தது.

எனினும் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி குறித்த பகுதியில் பெரும்பான்மையினர் மீண்டும் துப்பரவு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மாறாக பண்ணையாளர்களை மகாவலி அதிகாரிகள் கைது செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு கிழக்கில் தொல்பொருள் எனும் போர்வையில் தமிழர்களின் பாரம்பரிய காணிகளை சுபிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் மற்றும் பௌத்த மத இனவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், தற்போது கிழக்கு மாகாணத்திலும் பௌத்தமயமாக்கல் ஆரம்பித்துள்ளமை பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பில் பண்ணையாளர்களுக்கு என மாதவனை மயிலத்தமடு பிரதேசங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாதவனை மயிலத்த மடு பகுதியில் அதிகமான பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காகவும் தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில வருடங்களாக மாதவனை மயிலத்தமடு பகுதியில் மகாவலியின் தலையீடு காரணமாக பண்ணையாளர்களும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளானதுடன் பல கால்நடைகளும் சுடப்பட்டும் கத்திகளால் வெட்டப்பட்டும் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதேவேளையில் அங்கு சென்று வருகின்ற பண்ணையாளர்களின் உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலையில் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலைமையும் உருவாகி இருந்தமையை பல ஊடகங்கள் மூலமும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது .

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் விவசாயம் செய்வதற்காகவும் பயிர் செய்வதற்காவும் கால்நடைகளின் இடமாக கருதப்படும் மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி அவர்களை பயிற் செய்கை மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தி பண்ணையாளர்களுக்கும், மகாவலி பெரும்பான்மை இன மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுத்தும் விதத்தில் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்திருந்தார்.

கடந்த காலங்களில் இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் கடும்போக்கு சிங்கள வாத சிந்தனையுடன் சிங்கள குடியேற்றம் இடம்பெற வேண்டும் என்றும் பண்ணையாளர்கள் அடித்து துரத்தப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கள விஜயம் செய்திருந்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா இடமாற்றப்பட்டார்.

ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய ஒரு ஆளுநர் வந்திருக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து இந்த கிழக்கு மாகாண பண்ணையாளர்களின் முதுகெலும்பாக இருக்கும் இந்த மாதவனை மயிலத்த மடு மேச்சல் தரை பகுதியை உடனடியாக பண்ணையாளர்களுக்கு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தையும் கிழக்கு மாகாண மக்களுடைய பிரச்சனைக்கு உடனடியாக தீர்வையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply