இத்தாலியில் வங்கிச் சேவைகள் முடக்கம்

இத்தாலியில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இத்தாலியின் முக்கிய வங்கிகளான எம்.பி.எஸ் வங்கி, பி.பீ.ஈ.ஆர் வங்கி, சோன்ட்ரியோ வங்கி, பின்கோ வங்கி, செ வங்கி உள்ளிட்ட 5 வங்கிகளின் இணையத்தளங்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் இணைய சேவையும் முடக்கப்பட்டது.

முடக்கம் காரணமாக வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

பின்னர் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வங்கி சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், திடீர் முடக்கத்தினால் வங்கிகள் எந்தவித இழப்புகளையும்  சந்திக்கவில்லை என வங்கி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சைபர்-தாக்குதலுக்கு ரஷ்யாவை சோந்த ‘நோ நேம் 057’ ஹேக்கர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.

மேலும் இது ஆரம்பம் மட்டுமே என்றவாறாக குறுஞ்செய்திகளையும் அந்த ஹேக்கர்கள் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நாட்டின் இணைய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply