18 வருட திருமண உறவை முறித்துக்கொண்ட கனேடிய பிரதமர்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவியும் திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாகத் தெரிவித்துள்ளனர்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி ஆகியோர் கடந்த புதன்கிழமை எதிர்பாராத அறிவிப்பில் பிரிந்து செல்வதாகத் தெரிவித்தனர். இது தம்பதியினரின் 18 ஆண்டுகால  திருமண உறவின் முடிவைக் குறிப்பதாக உள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த  மே 2005 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு  15, 14 மற்றும் 9 வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தேர்தலில் பின்தங்கியுள்ள அவரது லிபரல் கட்சியின் பலத்தை உயர்த்தும் முயற்சியில் ட்ரூடோ ஒரு பெரிய அமைச்சரவை மாற்றத்தை வெளியிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு தம்பதியினர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்களுக்குப் பிறகு, நாங்கள் பிரிவதற்கான முடிவை எடுத்துள்ளோம் என்ற உண்மையை நானும் சோஃபியும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் என ட்ரூடோ தனது இன்ஸ்ரகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply