கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்பவர்களுக்கான விசேட அறிவிப்பு!

வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நெருக்கடியைக்  குறைக்கும் வகையில் இன்று முதல் வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில்  சேவைகளைப்  பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளது.

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகை தருவதால் அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டு வருவதுடன், பொதுமக்களுக்கிடையில் குழப்பநிலையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply