யாழில் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம், பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி கடற்கரையில் சட்டவிரோத மணல் ஏற்றிய நபர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

நேற்று புதன்கிழமை (02) இரவு மேற்கொண்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பளை பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் பிரணவன் என்பவரே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply