மட்டக்களப்பில் மாபெரும் எழுச்சிப் பயணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

வேர்களை மீட்டு உரிமையை வென்றிட மான்புமிகு மலையக மக்கள் என்னும் தொனிப்பொருளில் மலையகம் 200வது ஆண்டு எழுச்சி பயணம் மன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து காந்தி பூங்கா வரையிலான மாபெரும் எழுச்சிப் பயணம் ஒன்று எதிர்வரும் 8ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து காலை ஏழு முப்பது மணிக்கு தொடங்கும் நடைபயணம் மட்டக்களப்பு காந்தி பூங்காவை 11.30 மணியளவில் சென்றடைய உள்ளது.

குறித்த நடைபவனியை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மலைய மக்களின் உரிமை போராட்டத்திற்காக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்களுடைய உரிமைப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வர்த்தக சங்கங்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நலன் விரும்பிகள் பொதுமக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்ப்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply