வர்த்தக நிலையத்தினுள் புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியதியுள்ளது.

நேற்று(02) புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மூவரடங்கிய வன்முறை கும்பல் ஒன்று இரவு கடைக்குள் புகுந்து கண்ணாடி அலுமாரி , சோடா போத்தல்கள் என்பவற்றை அடித்து நொறுக்கியதோடு உரிமையாளர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.

உரிமையாளருக்கும், அவரது சகோதரருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply