மெக்சிகோவில் ரயில் – பேருந்து விபத்து : 7 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவின் குரேடாரே மாகாணத்தின் எல்.மார்க்யூஸ் நகரில் உள்ள ஒரு ரயில்வே பாதையைப் பயணிகள் பேருந்து கடந்தபோது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது,  பேருந்து ரயிலில் சிக்குண்டு தண்டவாளத்தில் இழுத்து செல்லப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மெக்சிகோவில் ரயில் சமிஞ்ஞைகள் மற்றும் தடுப்பு பாதைகளில் குறைபாடுகள் இருப்பதால் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி  இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மெக்சிகோ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply