மின் கட்டண நிலுவை – இருளில் மூழ்கியது ரஜமஹா விகாரை!

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் மாவட்ட பிரதேச மின் பொறியியலாளர் சமுத்திரநாத ஜயவர்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் தூபி நிர்மாணம் போன்ற பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த வேளையிலேயே இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரை பீடாதிபதி பூஜ்ய வளவ ஹங்குனவே தம்மரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply