திருமலையில் யானை தாக்கி வயோதிபர் பலி!

திருகோணமலை கந்தளாய் பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வனர்த்தம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பேரமடுவ பகுதியை சேர்ந்த 64 வயதுடைய ஆர். எம். குணவர்தன என்பவரே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

வீட்டு முற்றத்திற்கு வருகை தந்த காட்டு யானை ஒன்றை விரட்டுவதற்கு முற்பட்டபோதே யானை, குறித்த நபரை தாக்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் உடல் கூற்று பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply