செப்டம்பர் முடிவடையவுள்ள கடன் மறுசீரமைப்பு!

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வுக்கு இணங்க, கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்ய இலங்கை உத்தேசித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் CPA நிறுவனத்தை இலங்கையில் நிறுவும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தாங்கள் ஆரம்பித்துள்ள பரந்த மற்றும் நீண்ட கால சீர்திருத்தங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தெளிவான அறிகுறிகளைக் காட்டுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

பொதுச் செலவினங்களை திறம்பட நிர்வகிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும், நமக்கு முன்னால் ஒரு நீண்ட பயணம் உள்ளது எனனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply