குளவிக் கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட பிரிவில் இன்று இரண்டு தொழிலாளர்களும், ஒரு இளைஞனும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்து இவர்களை கொட்டியுள்ளது.

பின்னர் இவர்கள், உடனடியாக தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply