அவசர மருந்து கொள்வனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் அவசர மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் மருந்துத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மாத்திரம் அவசர கொள்வனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் குறைபாடுகள் குறித்து எழுத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கருத்து தெரிவிக்கையில், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்குள் இருந்த பிரச்சினைகள் தற்போது முற்றாக தீர்க்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply