பறாளாய் ஆலய பௌத்த மயமாக்கல் – ஆரம்பமானது போராட்டம்!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தை பௌத்தமயமாக்குவதற்கு முயற்சித்து, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ஒன்றியத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுழிபுரம் சந்திப் பகுதியில் இன்று காலை 10 மணி தொடக்கம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கி நாட்டிய மரமாக சித்திரித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று பி.ப. 3 மணிக்கு போராட்டமொன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply