தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாப மரணம்!

தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்தப் பரிதாபச் சம்பவம் கம்பஹா மாவட்டம் வத்தளைப் பிரதேசத்தில் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரெனக் காணாமல்போயுள்ளது.

பெற்றோர் அவரைத் தேடியபோது குறித்த குழந்தை நீர் நிரம்பிய தொட்டிக்குள் விழுந்து கிடந்துள்ளது.

குழந்தையைப் பெற்றோர் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

ராகம வைத்தியசாலையில் குழந்தையின் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply