மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போது நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுவதன் காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின்சார சபை தெரிவித்துள்ளதோடு தற்போது மாலை 06:00 மணி முதல் 08:00 மணி வரை தினசரி மின்சாரத் தேவை அதிகமாக உள்ளதாகவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.

ஆகவே அக்காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் மின்சாரத்தை பயன்படுத்தினால், தடைகளை குறைத்து மின்சாரத்தை வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply