கஞ்சனவின் இல்லத்திற்கு விசேட பாதுகாப்பு!

மாத்தறையில் உள்ள மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகராவின் இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்ச்செய்கைக்கு நீர் வழங்குமாறு கோரி விவசாயிகள் குழுவொன்று மாத்தறைக்கு செல்லவுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, அமைச்சரின் இல்லத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸ் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், ஹம்பாந்தோட்டையில் இருந்து மாத்தறைக்கு செல்லும் வழிகளிலும், கொழும்பில் இருந்து மாத்தறைக்குச் செல்லும் வழிகளிலும் பொலிஸ் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் 24 மணிநேரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 25 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply