யாழில் இரண்டு வாள்களுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த இரண்டு வாள்களும் மீட்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த வீட்டில் வசித்து வரும் இளைஞன் கைது செய்தபட்டத்துடன் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply