கோப்பாய் ஆசிரிய கலாசாலை நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா

நூற்றாண்டு காணும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அமைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா எதிர்வரும் 09.08.2023 புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இசுருபாய கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விக்கான பிரதம ஆணையாளர் கலாநிதி கே.ஏ.டி. புண்யதாசவும்,சிறப்பு விருந்தினர்களாக ஆசிரிய கல்விக்கான பணிப்பாளர் ஸ்ரீமா தசநாயக்கா தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான பணிப்பாளர் களனி ஹேமாலி ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி சு. பரமானந்தம் கோப்பாய் நவமங்கை நிவாச நிறுவுநரும் முன்னாள் ஆசிரிய கல்வி பணிப்பாளருமாகிய சுவர்ணா நவரட்ணமும் கலந்து கொள்ளவுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply