பம்பலப்பிட்டியவில் துப்பாக்கி பிரயோகம்!

கொழும்பு – பம்பலபிட்டி வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று மாலை கார் ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

வேன் ஒன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த கடத்தல்காரர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மெரைன் டிரைவ் வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகல் உள்ள குறுக்கு வீதியொன்றில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply