அமெரிக்காவில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கலிபோர்னியாவில் உள்ள ரிவர்சைட் கவுண்ட்டியில், ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருந்தபோது, இரு ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதியதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்களில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்ட நிலையில், மற்றொன்று மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 அதிகாரிகள் உயிரிழந்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக் குறித்த விசாரணைகளை அமெரிக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply