நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை களமிறக்க உத்தரவிட்டுள்ள ரணில்!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அறிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிற்காகவே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் படி, வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply