பிற்போடப்பட்டது ரணிலுடனான சந்திப்பு!

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த நிலையிலேயே பிறிதொரு நாளுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றில் நாளை மறுதினம் பெருந்தோட்ட துறை தொடர்பான விவாதம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்வரும் 12 ஆம் திகதி நுவரெலியாவில் முன்னெடுக்கவுள்ள நடைபயணம் என்பன காரணமாக குறித்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply