கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் ஒன்று  இன்றையதினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில்  சிறுவர்கள் தொடர்பான அதிகாரிகள், சிறுவர் தொடர்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறுவர்கள் தொடர்பான தொண்டு நிறுவனங்கள், கிராம மட்ட அமைப்புகள் என பலரும்  கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டிலில் இணையம் மூலமாக சிறுவர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் தொடர்பாகவும்  குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply