இம்ரான் கான் ஆதரவாளர்கள் கைது!

இலஞ்ச ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இம்ரான் கான், பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் தண்டனைக்காக அடைக்கப்பட்டுள்ளார்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply